இங்கிலாந்து மன்னர் சார்லஸ் வாழ்த்து

இந்தியாவின் 75வது குடியரசு தினத்தையொட்டி மன்னர் 3ம் சார்லஸ் வௌியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கடந்த ஆண்டு ஜி20 உச்சி மாநாட்டுக்கு இந்தியா தலைமை வகித்ததை பாராட்டி உள்ளார். மேலும் மன்னர் 3ம் சார்லஸ் தன் வாழ்த்து செய்தியில், “காமன்வெல்த்தின் சிறப்பு மிக்க 75வது ஆண்டில் இந்தியா, இங்கிலாந்து உறவு மேலும் வலுப்பெறும் என நான் நம்புகிறேன். இது நம்மை ஒருங்கிணைக்கும் நிலையான மதிப்புகள் மற்றும் நம்பிக்கைகளின் பொருத்தமான நினைவூட்டல். உலகின் மிக நெருக்கடியான சவால்களை சமாளிக்க இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற இங்கிலாந்து விரும்புகிறது” என்று தெரிவித்துள்ளார்.

The post இங்கிலாந்து மன்னர் சார்லஸ் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: