பாபநாசத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

 

கும்பகோணம், ஜன.26: பாபநாசத்தில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பாபநாசம் வட்டாட்சியர் மணிகண்டன் தலைமை வகித்து பேரணியை தொடங்கி வைத்தார். பாபநாசம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட பேரணி ரயில்வே ஸ்டேஷன் ரோடு, கடைவீதி, தெற்கு ராஜ வீதி, பாபநாசம் பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக சென்றடைந்தது. இந்த பேரணியின் போது பொதுமக்களுக்கு வாக்காளர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

பேரணியில் தேர்தல் துணை வட்டாட்சியர் சுரேஷ், கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், பாபநாசம் வருவாய் ஆய்வாளர்கள், வருவாய் அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக கல்லூரி வளாகத்தில் மதுரை கீழக்கரையில் தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவதல் அரங்கின் நேரலை காட்சி மாணவ, மாணவிகளுக்கு காண்பிக்கப்பட்டது.

The post பாபநாசத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Related Stories: