இதேபோல், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று தைபூச விழாவையொட்டி, அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சுவாமி அலைவாயு கந்தபெருமான் தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து கோயில் சேர்கிறார். தைப்பூசத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் பாதயாத்திரையாக குவிந்த வண்ணம் உள்ளனர். வடலூர் திருஅருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் 153வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா கொடியேற்றத்துடன் நேற்று காலை தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று 7 திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் நடக்கிறது.
The post இன்று தைப்பூசத் திருவிழா திருச்செந்தூர், பழநியில் லட்சக்கணக்கானோர் குவிந்தனர் appeared first on Dinakaran.