வீர வணக்க நாள் பொதுக்கூட்டம்

வாழப்பாடி: சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சேலம் கிழக்கு மாவட்ட திமுக மற்றும் மாணவர் அணி சார்பில், இன்று(25ம் தேதி) மாலை 6 மணிக்கு மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம், தம்மம்பட்டி பஸ் ஸ்டாண்டில் நடக்கிறது. கூட்டத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் தலைமையில், கிழக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சீனிவாசன் வரவேற்கிறார். நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேரு பேசுகிறார். கழக பேச்சாளர்கள் துறையூர் துரைபாண்டியன், மதுரை அலெக்சாண்டர், எம்பிக்கள் பொன்.கௌதம சிகாமணி, எஸ்.ஆர்.பார்த்திபன் ஆகியோர் பேசுகின்றனர். எனவே, கூட்டத்திற்கு மாவட்ட, மாநில நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், அனைத்து சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கட்சி முன்னோடிகள், சார்பு அணியின் நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: