தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் தேசிய இளைஞர் தின விழா

காஞ்சிபுரம்: மாமல்லபுரம் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில், தேசிய இளைஞர் தின விழா கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. இதில், கல்லூரி முதல்வர் மனு வேல்ராஜ் தலைமை தாங்கினார். கல்லூரியின் நிர்வாக இயக்குநர் மணி, தலைமை நிதி அதிகாரி சுரேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில், கலந்து கொண்டவர்கள் சிறப்பு விருந்தினர்கள் பேசுகையில், இளைஞர்கள் தான் இந்தியாவின் எதிர்காலம். திடமான, தீர்க்கமான திறமை உள்ள இளைஞர்களை கொண்டுதான் இந்த நாட்டை நல்ல பாதையில் கொண்டு சென்று நல்ல செயல் திட்டங்கள் செயல்படுத்த முடியும், நல்லா சமூகத்தையும் படைக்க முடியும். மேலும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு வழிகள், நிலைகள் மற்றும் மாணவர்கள் எந்த துறையாக இருந்தாலும் அதில் சிறந்து விளங்க தன்னை தயார் படுத்திக்கொள்ள வேண்டும்’ என்றனர். இந்நிகழ்ச்சியில், உதவி பேராசிரியர்கள், 200க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் கலந்துகொண்டனர்.

The post தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் தேசிய இளைஞர் தின விழா appeared first on Dinakaran.

Related Stories: