விபத்து நடந்தவுடனே லாரி மற்றும் கார்களில் தீப்பற்றி எரிய தொடங்கியது. தருமபுரி மற்றும் சேலம் மாவட்டம் காடையாம்பட்டியிலிருந்து சென்ற தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைத்தன. விபத்து நடந்த தொப்பூர் கணவாய் பகுதிக்கு தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன் ஜேசுபாதம் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்தார். விபத்தில் உயிரிழந்தவர்கள் யார் யார் என்பது குறித்தும், விபத்து குறித்தும் தொப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் சேலம் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
The post தருமபுரி தொப்பூர் கணவாய் இரட்டை பாலத்தின் மீது இரு லாரிகள் மற்றும் 3 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு appeared first on Dinakaran.