இந்நிலையில் குடியரசு தினத்தையொட்டி விழாவினை கொண்டாடுவது குறித்து பேசுவதற்காக நகராட்சி தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்டோர் கமிஷனர் அறைக்கு சென்றனர். அப்போது, கமிஷனரை சமாதானப்படுத்தினர். அப்போது, எம்எல்ஏ செல்வராஜ், ‘‘நான் பேசிக்கொண்டிருக்கும்போது நீ எதற்கு உள்ளே வந்தாய்?’’ என ஒருமையில் நகராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவரை பேசியுள்ளார். இதனை கண்ட திமுக கவுன்சிலர்கள் அங்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த மேட்டுப்பாளையம் டிஎஸ்பி பேச்சுவார்த்தை நடத்தி இருதரப்பையும் சமாதானப்படுத்தினார். பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். பெண் என்றும் பாராமல் ஒருமையில் பேசி மிரட்டிய அதிமுக எம்எல்ஏவால் நகராட்சி கமிஷனர் அழுத சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
The post அதிமுக எம்எல்ஏ மிரட்டல் கதறி அழுத பெண் கமிஷனர் appeared first on Dinakaran.