விழுப்புரம்: முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் விழுப்புரம் நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது. பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து ராஜேஷ் தாஸ் விழுப்புரம் அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டு வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
The post முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் விழுப்புரம் நீதிமன்றம் நாளை தீர்ப்பு appeared first on Dinakaran.