அதில், அரசு தரப்புக்கு உதவியாக விசாரணைக்கு எங்களையும் அனுமதிக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வாதிட இந்திய பிரஜையான அனைவருக்கும் உரிமை உள்ளது. இதுபோன்ற வழக்குகளில் வேறு மாநிலங்களில் மனுதாக்கல் செய்து விசாரணை நடந்து வருகிறது என குறிப்பிட்டுள்ளார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி பூர்ணிமா முன்னிலையில் நடந்து வந்தது.அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட பிறகு இன்று நீதிபதி பூர்ணிமா தீர்ப்பு வழங்கினார். அதில், உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட முந்தைய வழக்குகளின் தீர்ப்புகளை சுட்டிக் காட்டி, வழக்கில் தலையிடுவதற்கு எந்த அதிகாரமும் இல்லை என்று கூறி ஜெயக்குமாரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
The post பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் மனுதாரராக சேர்க்கக் கோரிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மனு தள்ளுபடி appeared first on Dinakaran.