அயோத்தி ராமர்கோயில் கருவறைக்குள் அமர்ந்து பிரதமர் மோடி, மோகன் பகாவத் சிறப்பு பூஜை

அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வந்தார். ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க அரசியல், கட்சி தலைவர்கள், திரைக்கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் என நாடு முழுவதிலும் இருந்து முக்கிய பிரபலங்கள் வருகை தந்துள்ளனர். பல்வேறு சிறம்பம்சங்களைக் கொண்டுள்ள ராமர் கோவில் குடமுழுக்கு விழாவால் அயோத்தி நகரமே விழாக்கோலம் கொண்டுள்ளது. அந்த வகையில்; ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி அயோத்தி வந்தார். அப்போது ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அயோத்தி ராமர் கோயிலுக்கு பிரதமர் பிராண பிரதிஷ்டையில் பங்கேற்க பட்டுடை அணிந்து கோவிலுக்கு வந்தார்.

பால ராமருக்கு அணிவிக்கப்படும் வஸ்திரங்களை கையில் ஏந்தி வந்த அவர் அயோத்தி ராமர் கோவில் சிறப்பு பூஜையில் பங்கேற்றுள்ளார். ராமர் கோவில் சிறப்பு பூஜையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தும் பங்கேற்றுள்ளார். ராமர் கோயில் திறப்பையொட்டி பழங்களை உண்டு, வெறும் தரையில் உறங்கி 11 நாட்கள் பிரதமர் விரதம் இருந்திருந்தார். வேத மந்திரங்கள் முழங்க நடைபெறும் பிராண பிரதிஷ்டையில் பிரதமர் மோடி வேண்டினார்.

The post அயோத்தி ராமர்கோயில் கருவறைக்குள் அமர்ந்து பிரதமர் மோடி, மோகன் பகாவத் சிறப்பு பூஜை appeared first on Dinakaran.

Related Stories: