தைப்பூச பிரம்மோற்சவ இன்னிசை கச்சேரி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி சுப்பிமணிய சுவாமி கோயிலில் நடைபெறும் 87ம் ஆண்டு தைப்பூச பிரம்மோற்சவ விழாவினையொட்டி இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது. கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயிலில், 87ம் ஆண்டு தைப்பூச பிரம்மோற்சவ விழா, கடந்த 18ம் தேதி துவங்கியது. வரும் 25ம் தேதி, தைப்பூசத்தன்று சுவாமிக்கு அபிஷேக ஆராதனை, அன்றிரவு சுவாமிக்கு புஷ்பங்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் மேள கச்சேரியுடன் நகர்வலம் நடைபெறும். விழாவையொட்டி வரும் 25ம் தேதி முதல் 30ம் தேதி வரை, மாட்டுச் சந்தை நடைபெறுகிறது. மேலும், 25ம் தேதி முதல் 30ம் தேதி வரை இரவு 8 மணி முதல் 10 மணி வரை இன்னிசை கச்சேரியும் நடைபெறுகிறது. வரும் 25ம் தேதி அருண் இசைக்குழுவின் இன்னிசை கச்சேரியும், 26ம் தேதி புருதோத்தமனின் பிரின்ஸ் இசைக்குழு, 27ம் தேதி ராஜகீதம் இசைக்குழு, 28ம் தேதி ராஜரத்தினத்தின் தமிழாலயா இசைக்குழு, 29ம் தேதி ஆடவா குழுவின் பல்சுவை கலைநிகழ்ச்சியும், 30ம் தேதி ஜான் சோமு மெலோடீஸ் இசை நடனம் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. விழாவின் கடைசி நாளான 30ம் தேதி இரவு 11 மணியளவில், வாணவேடிக்கை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

The post தைப்பூச பிரம்மோற்சவ இன்னிசை கச்சேரி appeared first on Dinakaran.

Related Stories: