கீழச்சிவல்பட்டியில் தமிழர் திருநாள் நிறைவு விழா

திருப்புத்தூர், ஜன. 21: சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டியில் பொங்கலையொட்டி நடைபெற்ற தமிழர் திருநாள் நிறைவடைந்தது. நிறைவு நாள் விழாவிற்கு ராமநாதன் தலைமை வகித்தார். அழகப்பன், நாகராஜன் முன்னிலை வகித்தனர். விழாக்குழு செயலர் பழனியப்பன் வரவேற்றார். நிகழ்ச்சியில், இந்திய சாதனையாளர் புத்தகம் 2023ல் இடம் பிடித்த சிறுவன் தெய்வா வள்ளியப்பனுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. தொடர்ந்து ஆன்மீக சொற்பொழிவு நடந்தது. விழாவில் கவிஞர் சிங்காரம், முன்னாள் எம்எல்ஏ சுப்புராமன், விஸ்வநாதன், சீனிவாசன், வட்டாட்சியர் சாந்தி உட்பட பலர் கலந்துகொண்டனர். பின்னர் குருவிக்கொண்டான்பட்டி, சிறுகூடல்பட்டி, பி.அழகாபுரி, பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அழகுமணிகண்டன் நன்றி கூறினார்.

The post கீழச்சிவல்பட்டியில் தமிழர் திருநாள் நிறைவு விழா appeared first on Dinakaran.

Related Stories: