பெரம்பலூரில் கால்நடை உதவி மருத்துவர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம்

பெரம்பலூர்,ஜன.21: பெரம் பலூரில் தமிழ்நாடு கால் நடை உதவி மருத்துவர்கள் சங்கத்தின் மாநில செயற் குழுக்கூட்டம்நடைபெற்றது. பெரம்பலூர் பாலக்கரை பகுதியிலுள்ள தனியார் ஹோட்டல் கூட்ட அரங்கில் நேற்று( 20ஆம்தேதி) தமிழ் நாடு கால்நடை உதவி மருத்துவர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடை பெற்றது. பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் டாக்டர் திருநாவுக்கரசு வரவேற்றார். மாநிலத் தலைவர் டாக்டர் வீரமணி தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் டாக்டர் தணிகைவேலு, துணைத் தலைவர் டாக்டர் ராம் குமார்,இணைச்செயலாளர் டாக்டர் சக்திவேல், மாநிலப் பொருளாளர் டாக்டர் செல் வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சங்கத்தின் மாநில பொதுக் குழுக் கூட்டத்தை வருகிற மார்ச் 9ம் தேதி கூட்டுவது எனத் தீர்மானம் நிறைவேற் றப் பட்டது. இந்த செயற் குழுவில் தலைமைச் சங்க நிர்வாகிகளான அமைப்பு செயலாளர் மரு.தங்கதுரை சட்டப் பிரிவு செயலாளர் டாக்டர் செல்வ குத்தாலிங் கம், வெட் சர்ஜன் இதழ் ஆசிரியர் டாக்டர் முருகன், தமிழ்நாடு கால்நடை மருத் துவ பேரவை உறுப்பினர் கள் மற்றும் மாநில செயற் குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். முடி வில் மாநில இணை செய லாளர் டாக்டர்.சக்திவேல் நன்றி கூறினார்.

The post பெரம்பலூரில் கால்நடை உதவி மருத்துவர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: