இந்த அபராத தொகையை 2வாரங்களில் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்தி அதுகுறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டுமென்று டிசம்பர் 22ம் தேதி உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மன்சூர் அலிகான் தரப்பில், தற்போது நிதி நெருக்கடியில் இருப்பதால், பெருந்தொகையான ஒரு லட்ச ரூபாய் அபராத தொகையை செலுத்துவதற்கு மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதைக்கேட்ட நீதிபதி, ஒருவரைப் பற்றி கருத்து தெரிவிக்கும்போது அதன் மூலம் ஏற்படும் தாக்கத்தை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று கூறி அபராத தொகையை செலுத்துவதற்கு மன்சூர் அலிகானுக்கு 10 நாட்கள் அவகாசம் வழங்கி உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 5ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
The post திரிஷா உள்ளிட்டோருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு அபராத தொகையை செலுத்த மன்சூர் அலிகானுக்கு அவகாசம்: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.