சிராவயல் மஞ்சுவிரட்டில் பலியான 2 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி: அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சிராவயல் மஞ்சுவிரட்டில் பலியான 2 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதியை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், சிராவயல் ஊராட்சியில் கடந்த 17ம் தேதி மஞ்சுவிரட்டுப் போட்டி நடைபெறும் இடத்திற்கு வெளியே காளை முட்டி சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், சிராவயல் ஊராட்சி, மருதங்குடி கிராமத்தைச் சேர்ந்த மணிமுத்து (35) மற்றும் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், கே.வளையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவன் பாஸ்கரன் ஆகிய இருவரும் எதிர்பாராதவிதமாக படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆறுதல் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிட்டிருந்தார். அதன்படி, 11 வயது சிறுவன் பாஸ்கரன், மணிமுத்து (35) குடும்பத்தினரிடம் ரூ.3 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார். 2 பேரின் குடும்பத்துக்கும் தனது சார்பிலும் தலா ரூ.1 லட்சம் நிதியை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.

The post சிராவயல் மஞ்சுவிரட்டில் பலியான 2 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி: அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: