பொங்கலை முன்னிட்டு தா.பழூரில் கிரிக்கெட் போட்டி: தத்தனூர் அணிக்கு முதல் பரிசு

 

தா.பழூர், ஜன. 19: அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஆர்சிசி கிரிக்கெட் கழகம் சார்பில் பொங்கலை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் அரியலூர், தஞ்சாவூர், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் இருந்தும், அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 32 அணிகள் கலந்து கொண்டன. இதில் முதல் நான்கு நாட்கள் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற அணிகள்‌ இறுதிப் போட்டிக்கு தேர்வாகியது.

இதில் முதல் பரிசு ரூ.20 ஆயிரம் தத்தனூர் ஸ்பார்டன் அணி வென்றது. இரண்டாம் பரிசு இடங்கண்ணி டைபி அணியும், மூன்றாம் பரிசு திருமானூர் டி சி சி அணியும், நான்காம் பரிசு தா.பழூர் ஆர்சிசி அணியும் பெற்றன. மேலும் இந்த போட்டியில் சிறந்த பந்து வீச்சாளர், சிறந்த மட்டை வீச்சாளர், சிறந்த களப்பணி என பலருக்கும் பரிசுகளும், பதக்கங்களும் வழங்கப்பட்டது.

The post பொங்கலை முன்னிட்டு தா.பழூரில் கிரிக்கெட் போட்டி: தத்தனூர் அணிக்கு முதல் பரிசு appeared first on Dinakaran.

Related Stories: