ஈரோடு: சத்தியமங்கலம் அருகே ஆசனூர் பகுதியில் காட்டு யானை தாக்கி நாகராஜ் என்பவர் படுகாயம் அடைந்துள்ளார். இட்டரையை சேர்ந்த நாகராஜ் பேச்சுலட்டி பேருந்து நிறுத்தத்தில் நின்றபோது யானை தாக்கியது. யானை தாக்கி படுகாயமடைந்த நாகராஜ் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.