யானை தாக்கி இளம்பெண் பலி

தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அருகே உள்ள அனுமந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாதேஷ் மனைவி மம்தா (27). இவர் நேற்று காலை 7 மணியளவில் மம்தா கெலமங்கலத்தில் உள்ள ஓட்டலுக்கு வேலைக்குச் செல்ல ஒரு டூவீலரில் லிப்ட் கேட்டு சென்றுள்ளார். சிங்கிரிபள்ளி பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது திடீரென புதருக்குள் இருந்து வெளியே வந்த யானை, மம்தாவை தும்பிக்கையால் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். தகவலறிந்து வந்த மம்தாவின் கணவர், உறவினர்கள் மற்றும் கொம்பேபள்ளி ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் தேவராஜ் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் மம்தாவின் சடலத்தை எடுக்க விடாமல் உத்தனப்பள்ளி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த உத்தனப்பள்ளி மக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, யானைகளை அடர்ந்த காட்டிற்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

The post யானை தாக்கி இளம்பெண் பலி appeared first on Dinakaran.

Related Stories: