புதுக்கோட்டை: பொங்கல் விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் வன்னியன் விடுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிறைவு பெற்றது. வன்னியன்விடுதி ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையாளர்கள் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர். வன்னியன்விடுதி ஜல்லிக்கட்டில் 25 காளைகளை அடக்கி திருச்சி சூரியூரை சேர்ந்த சிவா முதலிடம் பிடித்தார். முதலிடம் பிடித்த சிவாவுக்கு இருசக்கர வாகனம் மற்றும் வெற்றிக் கோப்பை பரிசாக வழங்கப்பட்டது.
The post புதுக்கோட்டை மாவட்டம் வன்னியன் விடுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிறைவு; 25 காளைகளை அடக்கி திருச்சி சூரியூரை சேர்ந்த சிவா முதலிடம்..!! appeared first on Dinakaran.