இந்தியாவில் 5 சர்வதேச விமான நிலையங்களைக் கொண்ட ஒரே மாநிலமாக உருவெடுக்கும் உத்தரப்பிரதேசம் : பிரதமர் மோடியின் தேர்தல் பரிசு!!

லக்னோ : உத்தரப்பிரதேச மாநிலம் கௌதம் புத்தா நகரில் உள்ள ஜேவாரில் நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கு நாளை பிற்பகல் 1 மணிக்குப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்ட உள்ள நிலையில் இந்தியாவில் ஐந்து சர்வதேச விமான நிலையங்களைக் கொண்ட ஒரே மாநிலமாக உத்தரப்பிரதேசம் மாறவிருக்கிறது.இந்த விமான நிலையம் டெல்லி தலைநகர் பிராந்தியத்தின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமாக இருக்கும். இது இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் நெருக்கடி குறைவதற்கு உதவும். இதன் அமைவிடம் காரணமாக டெல்லி, நொய்டா, காசியாபாத், அலிகார், ஆக்ரா, ஃபாரிதாபாத் மற்றும் அருகில் உள்ள பகுதிகள் உள்ளிட்ட நகரங்களின் மக்களுக்கு  சேவை புரியும்.வடக்கு இந்தியாவின் சரக்குப் போக்குவரத்து நுழைவாயிலாக இந்த விமான நிலையம் இருக்கும். உத்தரப்பிரதேசத்தின் ஆற்றலை உலகிற்கு வெளிப்படுத்துவதாக இது இருப்பதோடு உலகளாவிய சரக்குப் போக்குவரத்து வரைபடத்தில் இந்த மாநிலம் இடம்பெறுவதற்கு உதவும்.  மொத்தச் செலவு, சரக்குப்போக்குவரத்திற்கான நேரம் ஆகியவற்றைக் குறைப்பதை நோக்கமாகக்கொண்டு இந்தியாவில் முதல் முறையாக ஒருங்கிணைந்த பலவகை சரக்கு போக்குவரத்து மையம் என்ற கோட்பாட்டைக் கொண்ட விமான நிலையமாக இது இருக்கும். கரியமில வாயுவை வெளியேற்றாத இந்தியாவின் முதலாவது விமான நிலையமாக இது இருக்கும். திட்டத்தை செயல்படுத்தும் இடத்தில் உள்ள மரங்களைப் பயன்படுத்தி வனப்பூங்கா இந்த நிலப்பரப்பில் உருவாக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. உள்நாட்டு தாவரவகைகள் நொய்டா சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாக்கப்படும். இதன் மேம்பாடு முழுவதும் இயற்கை சார்ந்ததாக இருக்கும்.இந்த விமான நிலையத்தின் முதற்கட்டப்பணி ரூ.10,050 கோடி செலவில் மேற்கொள்ளப்படும். 1300-க்கும் அதிகமான ஹெக்டேர் நிலப்பரப்பில் முடிக்கப்பட உள்ள முதலாவது கட்ட விமான நிலையம் ஆண்டுக்கு சுமார் 1.2 கோடி பயனாளிகளுக்கு சேவை செய்யும் திறன் கொண்டதாக இருக்கும். இது 2024 வாக்கில் நிறைவடையும். இதனை சர்வதேச ஒப்பந்ததாரரான சூரிச் சர்வதேச விமான நிலைய நிறுவனம் செயல்படுத்தும். முதல் கட்டத்திற்கான நில ஆர்ஜிதம், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான மறுவாழ்வு ஆகியவற்றுக்கான பூர்வாங்க பணிகள் முடிக்கப்பட்டுள்ளன….

The post இந்தியாவில் 5 சர்வதேச விமான நிலையங்களைக் கொண்ட ஒரே மாநிலமாக உருவெடுக்கும் உத்தரப்பிரதேசம் : பிரதமர் மோடியின் தேர்தல் பரிசு!! appeared first on Dinakaran.

Related Stories: