மொத்தம் 2 கோடியே 19 லட்சம் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களில் ஒருவர் கூட விடுபடாமல் பொங்கல் பரிசு சிறப்பு தொகுப்பு வழங்கபடுகிறது. டோக்கன் பெற்றவர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.1000 ரொக்கம் 10ம் தேதி முதல் நேற்று வரை வழங்கப்பட்டது. டோக்கன் வழங்கப்படாதவர்கள் மற்றும் அரிசி அட்டைதாரர்கள் விடுபட்டு இருந்தால் 14ம் தேதி (இன்று) வழங்கப்படும் என்று அரசு அறிவித்து இருந்தது. அவர்கள் ரூ.1000 ரொக்கம் மற்றும் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு ஆகியவற்றை இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை ரேஷன் கடைகளுக்கு சென்று பெற்றுக் கொள்ளலாம். நாளை, நாளை மறுதினம் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை.
The post ரூ.1000 ரொக்கம் பொங்கல் பரிசு தொகுப்பு பெற இன்று கடைசி நாள் appeared first on Dinakaran.