அமைச்சர் முத்துசாமி பங்கேற்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

கோவை, ஜன.13: கோவை புலியகுளம்-சவுரிபாளையம் சாலை வழியாக இஎஸ்ஐ மருத்துவமனை, மீனா எஸ்டேட் பகுதியில் உள்ள கேந்திரிய வித்யாலா பள்ளி, அரசுப்பள்ளி, உடையாம்பாளைம், பெரியார் நகர், ஏரிமேடு, உப்பிலியபாளையம், சவுரிபாளையம், வரதராஜபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்பவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இச்சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்தனர். எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் இந்த சாலையை சீரமைக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புலியகுளம் பெரியார் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

The post அமைச்சர் முத்துசாமி பங்கேற்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: