புகையால் மூச்சுதிணறல், கண் எரிச்சலால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். சுற்றுச்சூழல் மாசு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சென்னை மாநகரம் மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வதற்கு மாசுக் கட்டுப்பாடு வாரியம் ஏற்பாடு செய்துள்ளது. போகிப்பண்டிகையின் முந்தைய நாள் மற்றும் போகிப்பண்டிகை நாளில் 15 இடங்களில் 24 மணி நேரமும் காற்றுத்தரத்தினை கண்காணிக்க காற்று மாதிரி சேகரிப்பு செய்து ஆய்வு செய்வதற்கு வாரியம் ஏற்பாடு செய்துள்ளது. மேலும் காற்றின் தர அளவு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும்.
The post புகையில்லா போகி கொண்டாட மாசு கட்டுப்பாடு வாரியம் மக்களுக்கு வேண்டுகோள் appeared first on Dinakaran.