கொலை முயற்சி வழக்கில் முன்ஜாமீன் கேட்கும் ஒன்றிய அமைச்சர்

புதுடெல்லி: ஒன்றிய உள்துறை இணை அமைச்சராக இருப்பவர் நிஷித் பிரமாணிக். கடந்த 2018ல் கூச்பிகார் மாவட்டம், தீன்ஹட்டா என்ற இடத்தில் மோதலின் போது,திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் மீது துப்பாக்கிசூடு நடந்ததில் ஒருவர் படுகாயமடைந்தார். இது தொடர்பாக பிரமாணிக் மீது கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கில் ஜல்பைகுரி சர்க்யூட் நீதிமன்றம் பிரமாணிக்கின் முன்ஜாமீன் மனுவை வரும் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தது. இதற்கிடையே,தனக்கு முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தை அவர் அணுகினார்.

The post கொலை முயற்சி வழக்கில் முன்ஜாமீன் கேட்கும் ஒன்றிய அமைச்சர் appeared first on Dinakaran.

Related Stories: