செங்கல்பட்டு கூட்டுறவு சங்கங்களுக்கு புதிய இணைப்பதிவாளர் நியமனம்

செங்கல்பட்டு, ஜன.12: செங்கல்பட்டு கூட்டுறவு சங்கங்களுக்கு, புதிய இணைப்பதிவாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளராக பதவி வகித்து வந்த தமிழ்செல்வி மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக செங்கல்பட்டு மாவட்டத்திற்கு கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளராக நந்தகுமார் நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து, நேற்று அவர் பொறுப்பேற்றுக்கொண்டார். இவர்‌, இதற்கு முன்பு‌ கடலூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார். புதிதாக பொறுப்பேற்ற‌ கூட்டுறவுத்துறை அதிகாரிக்கு கூட்டுறவுத்துறை அலுவலர்கள், ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

The post செங்கல்பட்டு கூட்டுறவு சங்கங்களுக்கு புதிய இணைப்பதிவாளர் நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: