இந்நிலையில், திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபத்திற்கான படகு சேவை நேரம் தற்பொழுது நீட்டிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவெளியின்றி படகு சேவை நடைபெற்று வருகிறது. இதையடுத்து, பொங்கல் பண்டிகையையொட்டி சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருவார்கள் என்பதால் படகு போக்குவரத்து சேவை 3 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வருகிற 15 முதல் 3 நாட்களுக்கு 3 மணி நேரம் படகு சேவை நீட்டிப்பு செய்யப்படும் என பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
The post கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபத்திற்கான படகு போக்குவரத்து சேவை நேரம் நீட்டிப்பு! appeared first on Dinakaran.