கடந்த 4ம் தேதி முதல் நடைபெற்ற முகாமில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் இன்று பெண்களுக்கான ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட 3 மாநிலங்களை சேர்ந்த ஏராளமான இளம்பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இவர்களுக்கு தேர்வு நுழைவுச்சீட்டு, கல்விச் சான்றிதழ்கள், காவல்துறை நடத்தை சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் உள்பட 18 வகையான சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டது. இதன் பின்னர் உடல் தகுதி தேர்வு நடைபெற்றது. கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழை காரணமாக, கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் தண்ணீர் தேங்கியுள்ளதால், உடல் தகுதி தேர்வு மட்டும் கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச் சாலையில் நடத்தப்பட்டது.
The post கடலூரில் ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம்: 3 மாநில பெண்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.