இந்நிலையில், 10 சதவீத இடஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒன்றிய அரசின் செயல்பாட்டுக்கு மரண அடி என்று திராவிட கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது; பொருளாதார அளவுகோலை இட ஒதுக்கீட்டில் திணிப்பது சட்டப்படி தவறு என்பதும் விளங்கிவிட்டது. கல்வி என்பது ஒத்திசைவு பட்டியலில் வரக்கூடியது; அதை புறக்கணித்து ஒன்றிய அரசு அவசர அவசரமாக சட்டத்தை நிறைவேற்றியது. பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு சட்டத்தை அவசரமாக ஒன்றிய அரசு நிறைவேற்றியது. தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களில் சட்டத்தை செயல்படுத்த முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பு, மாநில உரிமைகளை தன் விருப்பம் போல் பறிக்கலாம் என்ற ஒன்றிய அரசின் செயல்பாட்டுக்கு மரண அடி என்று அவர் கூறியுள்ளார்.
The post 10% இடஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒன்றிய அரசின் செயல்பாட்டுக்கு மரண அடி: கி.வீரமணி சாடல் appeared first on Dinakaran.