இந்த மாநாட்டில் பல்வேறு நிறுவனங்கள் தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்குவதற்காக தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன. இந்த நிலையில், தமிழ்நாட்டில் டைட்டன் நிறுவனம் ரூ.430 கோடி முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இது தொடார்பாக உலக முதலீட்டாளர் மாநாட்டில் டைட்டன் நிறுவனத்திற்கும்-தமிழ்நாடு அரசுக்கும் இடையே இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. டைட்டன் நிறுவனம் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதன் காரணமாக கூடுதலாக 1,400 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
The post தமிழ்நாட்டில் ரூ.430 கோடி முதலீடு செய்கிறது டைட்டன் நிறுவனம்; கூடுதலாக 1,400 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.