போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கு ஆன்லைன் பதிவு நடத்தப்பட்டது. காரைக்குடி, திருப்பத்தூர், திண்டுக்கல், தஞ்சாவூர், தேவகோட்டை, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து காளைகள் இதில் கலந்து கொள்கின்றன. முதலில் அடைக்கல மாதா கோயில் மாடு மற்றும் மலைக்கோயில் முருகன் மாடு அவிழ்த்து விடப்பட்டன.
இதனைத் தொடர்ந்து தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கும் முன்பு வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். கோட்டாட்சியர் வாசிக்க ஜல்லிக்கட்டு வீரர்கள் போட்டி தொடர்பான உறுதிமொழியை ஏற்றனர். ஜல்லிக்கட்டில் உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை பின்பற்றி காளைகளின் உரிமையாளர்களுடைய சாதி பெயரை கூறமாட்டோம் என விழா கமிட்டியினர் அறிவித்துள்ளனர்.
The post புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது!.. appeared first on Dinakaran.