புனித அந்தோணியார் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள்

திருக்கோவிலூர், ஜன. 3: திருக்கோவிலூர் அடுத்த அத்திப்பாக்கம் புனித அந்தோணியார் ஆலயத்தில் புத்தாண்டு ஆண்டையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த அத்திப்பாக்கம் கிராமத்தில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமையன்று கிறிஸ்துவ பக்தர்கள் அந்தோணியாரை வழிபடுவது வழக்கம். இந்த ஆலயத்தில் நேற்று 2024ம் ஆண்டு பிறந்து முதல் செவ்வாய்க்கிழமை என்பதால் பாதிரியார் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றதால் திருக்கோவிலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் வெளி மாவட்டத்தில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் கலந்து கொண்டதால் அந்தோணியார் ஆலயம் கூட்டத்தில் நிரம்பி வழிந்தது. இந்த ஆலயத்துக்கு தொடர்ந்து மூன்று செவ்வாய்க்கிழமை வந்து வழிபட்டால் தாங்கள் நினைத்தது நிச்சயம் நடக்கும் என்பது ஐதீகம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் புத்தாண்டையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் காவல் ஆய்வாளர் பாலாஜி தலைமையில் 50க்கும் மேற்பட்ட மணலூர்பேட்டை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post புனித அந்தோணியார் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள் appeared first on Dinakaran.

Related Stories: