மோனீஷ் சிங்காநல்லூரில் உள்ள ஒரு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த வாரம் மோனீசுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து சிறுவனை பெற்றோர் தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்றனர். சிறுவனை பரிசோதித்தபோது சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி மோனீஷ் உயிரிழந்தார்.
The post டெங்கு காய்ச்சலுக்கு மாணவர் சாவு appeared first on Dinakaran.