இது கோவிட் நோயின் உருமாறிய வைராசா என்பதை அறிய அவரது மாதிரி மரபணு வரிசை முறையை கண்டறிய, லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டது. பரிசோதனை முடிவுகள் வரும் வரை, மருத்துவமனையில் காத்திருக்குமாறு அதிகாரிகள் அவரிடம் கூறினர். ஆனால் அவர் திடீரென மாயமானார். அவரைப் பற்றிய தகவல்கள் மையப்படுத்தப்பட்ட கோவிட் போர்ட்டலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன என்று தலைமை மருத்துவ அதிகாரி அருண்குமார் ஸ்ரீவஸ்தவா கூறினார். இந்நிலையில் திருவனந்தபுரத்தை சேர்ந்த அந்த வாலிபரின் உடல் ஆக்ரா நீரோடையில் கண்டெடுக்கப்பட்டது. அவரது சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கொரோனா வைரஸ் உறுதியானதால் கேரள இளைஞர் ஆக்ராவில் தற்கொலை appeared first on Dinakaran.