ஓலப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம்

 

வேலாயுதம்பாளையம் டிச.31:கரூர் மாவட்டம் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் உன்னூத்துப்பாளையம் பகுதியில் காய்ச்சல் குறித்த ரத்த பரிசோதனை நடைபெற்றது. முகாமில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் தலைமையில், செவிலியர்கள் மற்றும் சுகாதார தன்னார்வலர்கள் கொண்ட குழுவினர் உன்னூத்து பாளையம் பகுதியில் உள்ள வீடுகளுக்கு நேரடியாக சென்று முதியவர்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு ரத்தப் பரிசோதனை செய்து ரத்தத்தில் சர்க்கரை அளவு ,ரத்த அழுத்த அளவு, மற்றும் உடல் பரிசோதனை,தலைவலி, காய்ச்சல், உடல் வலி, சளி, இருமல் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை செய்து அவர்களுக்கு தேவையான உரிய மருந்து, மாத்திரைகளை வழங்கினர். முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினா்.முகாமில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post ஓலப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம் appeared first on Dinakaran.

Related Stories: