கல்பாக்கம் அருகே இசிஆரில் 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதி கறிக்கடைகாரர் பலி

 

திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அருகே 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கறிக்கடைகாரர் பரிதாபமாக பலியானார். கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் பாபு (65). அப்பகுதியில் கறி மற்றும் மீன் கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று மாலை தனது பைக்கில் அங்குள்ள இசிஆர் சாலையில் விட்டிலாபுரம் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே கூவத்தூர் பகுதியைச் சேர்ந்த விஷால் (21) என்பவர் மற்றொரு பைக்கில் வேகமாக வந்துள்ளார். அப்போது பாபு ஓட்டி வந்த பைக் மீது விஷாலின் பைக் மோதியது.

இதில் இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த பாபு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த சதுரங்கப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பாபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்த விஷாலையும் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post கல்பாக்கம் அருகே இசிஆரில் 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதி கறிக்கடைகாரர் பலி appeared first on Dinakaran.

Related Stories: