சென்னை கோயம்பேடு தேமுதிக அலுவலகம் அருகே போலீசார் லேசான தடியடி..!!

சென்னை: சென்னை கோயம்பேடு தேமுதிக அலுவலகம் அருகே போலீசார் லேசான தடியடி நடத்தினர். தேமுதிக அலுவலகத்திற்குள் அனுமதிக்க வலியுறுத்தி வாக்குவாதம் செய்தனர். அலுவலகத்திற்குள் அனுமதிக்க தேமுதிக தொண்டர்கள், ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். தேமுதிக தலைமை அலுவலகம் முன் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. இறுதிச் சடங்கு நடைபெறும் இடத்திற்குள் செல்ல ஏராளமானோர் முயற்சி செய்து வருகின்றனர். போலீஸ் தடுப்புகளை மீறி மக்கள் முன்னேறியதால் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

The post சென்னை கோயம்பேடு தேமுதிக அலுவலகம் அருகே போலீசார் லேசான தடியடி..!! appeared first on Dinakaran.

Related Stories: