இதில் நகர்மன்ற உறுப்பினர்கள் வசந்தி வேலாயுதம், சுமித்ரா வெங்கடேசன், நீலாவதி பன்னீர்செல்வம், அம்பிகா ராஜசேகர், பிரபாகரன், பிரபு, சாந்தி கோபி, அயூப் அலி, பாபு, ஜான், ராஜ்குமார் (எ)தாமஸ், பத்மாவதி ஸ்ரீதர், அருணா ஜெய்கிருஷ்ணா, இந்திரா பரசுராமன், சீனிவாசன், ஹேமலதா, விஜயகுமார், கமலி, ஆனந்தி சந்திரசேகர், செந்தில்குமார், விஜயலட்சுமி கண்ணன், தனலட்சுமி சீனிவாசன், நகராட்சி பொறியாளர் நடராஜன், சுகாதார அலுவலர் கோவிந்தராஜ், நகர் நல அலுவலர் குணசேகரன், உதவி பொறியாளர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் மிக்ஜாம் புயல், மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெள்ள நிவாரணம் ரூ.6,000 வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சரர் மு.க.ஸ்டாலினுக்கும், வெள்ள நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுத்த திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரனுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் உள்பட கடைகள் ஏலம், வரவு, செலவு மற்றும் வளர்ச்சிப்பணிகள் தொடர்பான 36 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனைத் தொடர்ந்து நகர்மன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்து நகர்மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன் பேசும்போது, மிக்ஜாம் புயலால் மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் மீண்டும் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், சேதமடைந்த சாலைகள், பாதாள சாக்கடை கழிவு நீர் வெளியேறாமல் இருக்கவும் போர்க்கால அடிப்படையில் ஏற்பாடு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், நகராட்சியில் உள்ள ஒவ்வொரு வார்டுகளின் எல்லைகளையும் அறிந்து கொள்ளும் வகையில் பெயர் பலகைகள் வைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
The post வெள்ள நிவாரணம் ரூ.6,000 வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து திருவள்ளூர் நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.