முதல்வரை குறை கூறும் தமிழிசை, தூத்துக்குடியில் 15 நிமிடம் இருந்திருப்பாரா? வாயில் வடை சுடுவதில் நிர்மலா சீதாராமனுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம். அவர் வேண்டாத அரசியல் பேசுகிறார். 5 ஆண்டாக நிதியமைச்சர் பொறுப்பில் இருந்து கொண்டு, அதற்கு தகுதியானவராக செயல்படவில்லை. வெள்ளத்தில் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு நிதி நிலையில் முதல்கட்டமாக என்ன வழங்க முடியுமோ அதை வழங்கி உள்ளது. ஒன்றிய அரசு தான் முழுமையாக வழங்க வேண்டும். ஒன்றிய அரசு நிதி கொடுக்காமல் எதுவும் செய்வது சாத்தியமல்ல. ஒன்றிய அரசு தமிழக மக்களை வஞ்சிப்பதை நிறுத்த வேண்டும். இவ்வாறு கூறினார்.
The post வாயில் வடை சுடுவதில் நிர்மலாவுக்கு நோபல் பரிசு: மாணிக்கம் தாகூர் எம்பி தாக்கு appeared first on Dinakaran.