பிரச்னை நடக்கப்ேபாகிறது என்பதை உணர்ந்துகொண்ட பிரபாகரன், அவர்களிடம் இருந்து தப்பிச்செல்ல முயன்றார். ஆனால் அந்த கும்பல் விரட்டி சென்று பிரபாகரனை சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவர் இறந்துவிட்டார் என்று உறுதி செய்தபின்னர் கும்பல் காரில் தப்பிச் சென்றுவிட்டது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் சிவகாஞ்சி போலீசார் விரைந்துவந்து பிரபாகரன் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுபற்றி வழக்குபதிவு செய்து பிரபாகரனை கொலை செய்த கும்பலை தேடி போலீசார் வருகின்றனர். இந்த சம்பவத்தால் காஞ்சிபுரத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.
The post காஞ்சிபுரத்தில் இன்று பயங்கரம்; பிரபல ரவுடி வெட்டிக்கொலை: காரில் தப்பிய கும்பலுக்கு வலைவீச்சு appeared first on Dinakaran.