இதனால் திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் நிலை காணப்படுகிறது. மேலும் ஜனவரி 1ம் தேதி வரை சொர்க்க வாசல் தரிசன டோக்கன் பக்தர்களுக்கு வழங்கப்படும் இலவச தரிசன டோக்கன்கள் மற்றும் 300 ரூபாய் தரிசன டிக்கெட்கள் விநியோகம் முடிந்துவிட்டது. இலவச தரிசன டோக்கன்கள் இல்லாமல் ஸ்ரீவாரி தரிசனம் செய்ய முடியாது. இதன் காரணமாக ஜனவரி 1ம் தேதி வரை தரிசன டிக்கெட் இல்லாத பக்தர்கள் திருப்பதிக்கு வரவேண்டாம். இலவச தரிசன டோக்கன்கள் ஜனவரி 2ம் தேதி முதல் வழங்கப்படும். தொடர் விடுமுறையையொட்டி திருப்பதிக்கு வர ஆயத்தமாகும் பக்தர்கள், அதற்கு ஏற்ப தங்களின் பயணத்தை திட்டமிட்டுக்கொள்ளும்படி தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
The post திருப்பதியில் இலவச சொர்க்க வாசல் தரிசன டோக்கன் விநியோகம் முடிந்ததால் ஜன.1 வரை பக்தர்கள் வரவேண்டாம்: தேவஸ்தானம் அறிவிப்பு appeared first on Dinakaran.