பாம்பன் கடலில் பற்றி எரிந்த விசைப்படகு

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியைச் சேர்ந்த மீனவர் காலின்ஸ் தனது விசைப்படகை பாம்பன் தெற்குவாடி கடலில் நங்கூரமிட்டு நிறுத்தியிருந்தார். நேற்று அதிகாலை திடீரென படகு தீப்பற்றி எரிந்தது. இரவு நேரம் என்பதால், படகின் உள்ளே மற்றும் மேல்பகுதி முழுவதும் தீ மளமளவென பற்றி கொழுந்து விட்டு எரிந்தது.

அப்போது கடற்கரைக்கு சென்ற காலின்ஸ் படகு தீப்பிடித்து எரிவது பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, மற்றொரு படகில் சென்று தீயை அணைக்க முயன்றார். ஆனால் அதற்குள் படகு முழுவதும் எரிந்து நாசமானது. படகு எரிந்ததில் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவர் காலின்ஸ் தெரிவித்தார்.

The post பாம்பன் கடலில் பற்றி எரிந்த விசைப்படகு appeared first on Dinakaran.

Related Stories: