கூட்டுறவு சங்க காலி பணியிடங்களை நிரப்ப இன்று எழுத்து தேர்வு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்கள், நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு திருவள்ளூர் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையத்தால் இன்று 24ம் தேதி முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை காக்களூர் சி.சி.சி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ராஜாஜிபுரம் ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் நடத்தப்பட உள்ளன.
தேர்வு தொடர்பான உதவிக்கு திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய அலுவலக கட்டுப்பாட்டு அறை எண் 7338749108 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

திருவள்ளூர் நகர பேருந்து நிலையம் மற்றும் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இன்று 24ம் தேதி காலை 7 மணி முதல் செயல்படவுள்ள ‘திருவள்ளூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய உதவி மையத்தினை’ தொடர்பு கொள்ளலாம்.
மேலும் தேர்வு எழுதுபவர்கள் இணையதள முகவரியான www. drbtvl.in என்ற இணைய முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என்றும், இந்த வசதியினை பயன்படுத்திக் கொள்ளலாம் என கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளரும், மாவட்ட ஆள் சேர்ப்பு நிலைய தலைவருமான தி.சண்முகவள்ளி தெரிவித்துள்ளார்.

The post கூட்டுறவு சங்க காலி பணியிடங்களை நிரப்ப இன்று எழுத்து தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: