டெல்லி : இந்தியாவில் மொத்தம் 10 கருப்பு நிற புலிகள் உள்ளது. அவை அனைத்தும் ஒடிசாவில் சிம்லிபால் வனப்பகுதியில் இருப்பதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல் அளித்துள்ளது. ஒடிசாவில் காணப்படும் கருப்பு நிற புலிகள் மிக அரிதான வகையை சேர்ந்த புலிகள் என கருதப்படுகிறது. இதன் செல்களில் ஏற்பட்டுள்ள மரபணு மாற்றம்தான் இந்த நிற மாற்றத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.