பறிமுதல் டூவீலர்கள் ஏலம் 27ம் தேதிக்கு ஒத்தி வைப்பு

திருச்சி, டிச.23: மாவட்ட எஸ்பி அலுவலகம் சார்பில் இன்று நடைபெற இருந்த டூவீலர்கள் ஏலம் வரும் 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது குறித்து எஸ்பி அலுவலகம் தெரிவித்துள்ளதாவது: திருச்சி மாவட்ட அமலாக்கப்பிரிவு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட டூவீலர்கள் ஏலம் இன்று 23ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. நிர்வாக காரணங்களை முன்னிட்டு இந்த ஏலம் வரும் 27ம் ேததிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு எஸ்பி அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பறிமுதல் டூவீலர்கள் ஏலம் 27ம் தேதிக்கு ஒத்தி வைப்பு appeared first on Dinakaran.

Related Stories: