இதை தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு, ஓட்டுநர் செயல்முறை தேர்வுக்காக அழைப்பு கடிதம் அனுப்பப்படுகிறது. இந்நிலையில் வரும் 26ம் தேதி முதல் செயல்முறை தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், வெளிப்படைத்தன்மையுடன் தேர்வுகள் நடத்த வேண்டும் என நீதிமன்ற உத்தரவு இருப்பதால் தேர்வுக்கான பணிகள் தாமதமாகின்றன. தினமும் குறைவான அளவிலேயே செயல்முறை தேர்வுக்கு அழைப்பு விடுக்க திட்டமிட்டுள்ளோம். சென்னை குரோம்பேட்டை, கும்மிடிப்பூண்டி, திருச்சியில் உள்ள சாலை போக்குவரத்து நிறுவனங்கள் என 3 இடங்களில் செயல்முறை தேர்வு நடத்தப்பட உள்ளது. பிப்ரவரி மாதத்தில் நேர்முக தேர்வு நடத்தப்படும். மார்ச் மாதத்திற்குள் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றனர்.
The post ஓட்டுநருடன் நடத்துநர் பணிக்கு தேர்வு வரும் 26ம் தேதி முதல் செயல்முறை தேர்வு: போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.