இந்திய வீராங்கனைகள் பூஜா வஸ்ட்ரகர் 4, ஸ்நேகா ராணா 3, தீப்தி சர்மா 2 விக்கெட் எடுத்தனர். தொடர்ந்து இந்திய மகளிர் முதல் இன்னிங்சை தொடங்கினர். பொறுப்புடன் விளையாடிய தொடக்க வீராங்கனைகள் ஷபாலி வர்மா, ஸ்மிரிதி மந்தானா முதல் விக்கெட்டுக்கு 90ரன் சேர்த்தனர். ஷாபாலி 40ரன்னில் வெளியேறினார். அடுத்த சில ஓவர்களில் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அப்போது இந்திய மகளிர் ஒரு விக்கெட் மட்டும் இழந்து 19ஓவரில் 98ரன் எடுத்திருந்தனர். அதனால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 121ரன் பின்தங்கி உள்ளனர். ஜெஸ் ஒரு விக்கெட் எடுத்தார். களத்தில் உள்ள இந்திய வீராங்கனைகள் மந்தானா 43, ஸ்நேகா 4ரன்னுடன் 2வது நாளான இன்று முதல் இன்னிங்சை தொடர உள்ளனர்.
The post மும்பை மகளிர் டெஸ்ட்; ஆஸியை சுருட்டிய இந்தியா appeared first on Dinakaran.