இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘‘வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மீட்டெடுத்து உயிரிழப்புகளை தடுக்க வேண்டியது தான் நம் முன் தற்போது இருக்கக்கூடிய தலையாய கடமை. முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உணவு, உடைகள், போர்வைகள் போன்ற பொருட்களை உடனடியாக வழங்கிட வேண்டும்’’ என்றார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தலைமை செயலகத்திலிருந்து தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், பொதுத்துறை செயலாளர் நந்தகுமார், ஆகியோரும், காணொலிக் காட்சி வாயிலாக வருவாய் நிர்வாக ஆணையர், கூடுதல் செயலாளர் எஸ்.கே. பிரபாகர், மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
The post அமைச்சர்கள், 4 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை: உயிரிழப்புகளை தடுக்க வேண்டியதுதான் தலையாய கடமை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.