சென்னை: நைஜீரியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 1.2 கிலோ போதைப்பொருள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. போதைப்பொருள் அடங்கிய கேப்சூல்களை வயிற்றில் விழுங்கி கடத்தி வந்தபோது 28 வயது நைஜீரியர் சிக்கினார். ரூ.12 கோடி மதிப்புள்ள கோக்கேன் பறிமுதல் செய்து நைஜீரிய இளைஞரிடம் சுங்கத்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.