மாவட்ட நீதிபதி பாலியல் தொல்லை தற்கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பெண் நீதிபதி கடிதத்தால் பரபரப்பு

புதுடெல்லி: உத்தரபிரதேச பாண்டா மாவட்ட பெண் நீதிபதி ஒருவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட்டுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “நான் பாரபங்கி என்ற பகுதியில் நீதிபதியாக நியமிக்கப்பட்டேன். அங்குள்ள மற்றொரு மாவட்ட நீதிபதியால் மிகவும் கீழ்த்தரமாக நடத்தப்பட்டேன். நான் சந்தித்த பாலியல் துஷ்பிரயோகங்கள், துன்புறுத்தல்களுடன் என்னால் இனி வாழ முடியாது. கடந்த ஒன்றரை வருடங்களில் நடைப்பிணமாக நான் ஆக்கப்பட்டேன்,

இதுகுறித்து 2022ல்அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் புகார் அளித்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆன்மாவும், உயிரும் இல்லாத இந்த உடலை சுமந்து கொண்டு இனிவாழ விரும்பவில்லை. தற்கொலை செய்து என் வாழ்க்கையை முடித்து கொள்ள அனுமதிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். இந்த கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை அதிகப்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்ற விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கும்படி தலைமை நீதிபதி டி.ஒய். சந்திர சூட் உத்தரவிட்டுள்ளார்.

The post மாவட்ட நீதிபதி பாலியல் தொல்லை தற்கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பெண் நீதிபதி கடிதத்தால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: