கடந்த சில மாதங்களாக ஊட்டியில் அவ்வப்போது மழை பெய்து வந்த நிலையில் தற்போது மழை குறைந்து நீர்பனி கொட்டி வருகிறது. இதனால், ரோஜா பூங்காவில் மலர்கள் உதிர ஆரம்பித்துள்ளன. தற்போது ஒரு சில செடிகளில் மட்டுமே மலர்கள் காணப்படுகிறது. இந்த மலர்களும் ஓரிரு நாட்களில் உதிர்ந்துவிடும். அடுத்த மாதத்திற்கு மேல் முதல் சீசனுக்கான பணி மேற்கொள்ளப்படும் நிலையில் பிப்ரவரி மாதமே இனி ரோஜா மலர்களை காண முடியும். இதனால் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
The post ஊட்டியில் நீர் பனி தாக்கம் அதிகரிப்பு; ரோஜா பூங்காவில் உதிர்ந்த மலர்கள்: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் appeared first on Dinakaran.